இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டைக் காகித இறக்குமதி கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 37 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் காகித மற்றும் அட்டைக் காகித இறக்குமதி 10.7 லட்சம் டன்னாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 37 சதவீதம் சரிவாகும். அப்போது காகித மற்றும் அட்டைக் காகித இறக்குமதி 14.4 லட்சம் டன்னாக இருந்தது. அது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டைவிட 25 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட காகித மற்றும் அட்டைக் காகிதங்களின் மதிப்பு சுமாா் ரூ.10,000 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.