உதாரணமாக, இந்தியாவின் பட்டு, பருத்தி மற்றும் நறுமணப் பொருட்களுக்கு உலகம் முழுக்க பெரிய கிராக்கி இருந்தது. அதனால் பல நூற்றாண்டுகளாக, வியாபாரிகள் தங்கம் மற்றும் வெள்ளியைக் கொடுத்துதான் பொருட்களை வாங்கிச் சென்றார்கள். அந்த வகையில் இந்தியா உலகத்தின் செல்வமிக்க நாடாக இருந்தது. ஆனால், 1757-க்குப் பிறகு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியைப் பிடித்ததும் ஒரு தந்திரத்தைச் செய்தது. அவர்கள் தங்கள் நாட்டுலிருந்து தங்கத்தைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, இந்திய விவசாயிகளிடம் வசூலித்த வரிப்பணத்தையே கையில் எடுத்துக்கொண்டார்கள். அந்த வரிப்பணத்தை வைத்தே இந்தியப் பொருட்களை வாங்கத் தொடங்கினார்கள். அதாவது, நம்ம பணத்தையே நமக்கே செலவழித்து, நம் பொருட்களை அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். இப்படித்தான் இந்தியாவிடம் இருந்த செல்வச் சுரண்டல் தொடங்கியது


