Last Updated:
நிச்சயமாக எங்களுடைய பாசிட்டிவான விஷயங்களின் பக்கம் கவனம் செலுத்துவோம். அணியில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன என்பதை நான் மறுக்கவில்லை.
ஐபிஎல் வேளையில் லக்னோ அணியினர் 27 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீது விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் ஜாஹிர் கான் அது குறித்து பதில் அளித்து இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை ரூ. 27 கோடி கொடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச தொகை என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் செயல்பட்டு வருகிறார். அவரது கேப்டன்ஷிப்பின் கீழ் லக்னோ அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
3 போட்டிகளில் அவர் மொத்தமே 17 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் குவிந்துள்ளது. இந்த நிலையில் ரிஷப் பந்த் குறித்து லக்னோ அணியின் ஆலோசகர் ஜாஹிர் கான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ரிஷப் பந்த் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. இதுவரை அவர் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். பேட்ஸ்மேன் ஆகவும் அவர் சிறந்த முறையில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார். மூன்று போட்டியில் தான் இதுவரை முடிந்துள்ளது இன்னும் 11 ஆட்டங்கள் உள்ளன.
நிச்சயமாக எங்களுடைய பாசிட்டிவான விஷயங்களின் பக்கம் கவனம் செலுத்துவோம். அணியில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன என்பதை நான் மறுக்கவில்லை. வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த அணியாக பார்க்கும் போது இதுவரை அதிக விக்கெட் எடுத்த அணியாக லக்னோ உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் 18 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
April 03, 2025 9:20 PM IST