ஒடிசா மாநிலம் மால்கான்கிரி மாவட்டத்தில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மால்கான்கிரி மாவட்டத்தின் குதன்பேடா கிராமத்தில் பதுங்கியிருந்த 3 பேரையும் நேற்று (டிச.28) சித்திரக்கொண்டா காவல்துறையினர் கைது செய்தனர்.
தன்கட்பத்கர் கிராமத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளான சந்திரமா கில்லோ, கமலா கில்லோ மற்றும் சுனிதா கில்லோ ஆகிய மூன்று பெண்களையும் ரூ. 8லட்சம் சன்மானம் அறிவித்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குந்தபேடா கிராமத்தில் மாவோயிட்கள் ரகசியக் கூட்டம் நடத்துவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்திரக்கொண்டா காவல்துறை மற்றும் மாவட்ட தன்னார்வப் படை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தப்பியோடிய மாவோயிஸ்டுகளில் மூன்று பெண்கள் மட்டும் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!

