ஆந்திராவில் ஜூன் 3, 4, 5ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் அன்மையில் ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 6 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஜுன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன், ஜுன் 4ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு அன்றைய தினம் இந்தியாவை ஆட்சி செய்யப்போகும் கட்சி எது என்று தீர்மானிக்கப்படுகிறது.
2024 ஆந்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் பல்வேறு சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் கணிப்புகள் சாத்தியமான விளைவுகளைப் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை பிரதிபலிக்கின்றன. YSRCP, TDP மற்றும் JSP உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தந்த கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர். YSRCP 95-110 இடங்களைப் பெறுவது முதல் TDP மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கணிசமான எண்ணிக்கையிலான இடங்களுடன் அரசாங்கத்தை அமைக்கும் வரையிலான கணிப்புகள் உள்ளன.
இதையும் படிங்க:
நீதிமன்ற விடுமுறை பற்றி விமர்சனம்… பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்!
இந்நிலையில் ஆந்திராவில் ஜூன் 3, 4, 5ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி ஆந்திராவில் 3 நாட்களுக்கு மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)