Last Updated:
Jallikattu Competition| இரண்டாம் ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியால் சாலப்பாளையம் பகுதி திருவிழா போல் காட்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 3 டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிட்ட தக்கது.
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் “கட்டப்பா 2” என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டின் தொடக்கமாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு வாடிவாசல் வழியாக முதலில் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து நாமக்கல், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, பெரம்பலூர், தேனி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் காயமடைந்த வீரர்களுக்கு உதவும் வகையில் மருத்துவத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு காளைகளை அவிழ்க்கும்போதும் வெள்ளிக்காசு, சைக்கிள், கட்டில், மெத்தை, டிவி, டிரஸ்சிங் டேபிள், சில்வர் பாத்திரம், ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாம் ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியால் சாலப்பாளையம் பகுதி திருவிழா போல் காட்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 3 டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 01, 2025 7:30 PM IST

