பட்டர்வொர்த் | மார்ச் 14, 2026:
பிறை பகுதியில் உள்ள வடக்கு நோக்கிய நெடுஞ்சாலையின் 137.4-வது கிலோமீட்டரில் இன்று மதியம் மூன்று கார்கள் மற்றும் ஒரு டிரெய்லர் லாரி சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நிகழ்ந்தது.
மதியம் 3:12 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.


இந்த விபத்தில் மூன்று கார்கள் மற்றும் ஒரு டிரெய்லர் லோரி (Trailer Lorry) ஆகிய நான்கு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
விபத்து நடந்த இடத்தில் மொத்தம் 6 பேர் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.


விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், பிறை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கவும், போக்குவரத்தைச் சீர்செய்யவும் காவல்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்தின் (MOH) அதிகாரிகளும் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.




