• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

22 வயதில் ஓய்வு பெற்ற உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி

GenevaTimes by GenevaTimes
December 5, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
22 வயதில் ஓய்வு பெற்ற உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா, ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநர் உட்பட, குழுமத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகிக்கிறார். ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்த அவர், ரஞ்சி டிராபியில் மத்தியப் பிரதேசத்திற்காக விளையாடினார், பின்னர் காயம் காரணமாக விளையாட்டிலிருந்து காலவரையற்ற ஓய்வை அறிவித்துள்ளார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், அதன் தொடக்க காலத்தில் இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அமைதியான ஜென்டில்மேன் விளையாட்டில் இருந்து ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டம், திகைப்பூட்டும் விளக்குகள் மற்றும் பில்லியன் டாலர் உரிமையாளர்களின் காட்சியாக கிரிக்கெட் பரிணமித்துள்ளது.

விளம்பரம்

ஐபிஎல் போன்ற லீக்குகளின் வருகையானது விளையாட்டை விளையாடும் விதத்தை மட்டும் மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், விளையாட்டை ஒருவர் பார்க்கும் விதத்தையும் மாற்றியுள்ளது. மேலும் புதிய திறமைசாலிகள் கிட்டத்தட்ட ஒரே இரவில் புகழையும், செல்வத்தையும் அடையவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இருப்பினும், தனது 22 வயதில் ஓய்வை அறிவித்த ஆர்யமான் பிர்லா தான், இன்னும் ‘உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்’ என்று அறியப்படுகிறார். ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.70,000 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்யமானின் ஈடுபாடு, முக்கியமாக குழுவில் அவரது பல பாத்திரங்களில் இருந்து வருகிறது.

விளம்பரம்

2023 இல் ஆர்யமான், ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட் (ABFRL) இல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் ஆதித்ய பிர்லா மேலாண்மை கார்ப்பரேஷன் மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் வாரியங்களிலும் பணியாற்றுகிறார். தொழில்துறை வட்டாரங்களில், ஆர்யமான் பிர்லா குழுமத்தின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்.

Also Read :
பேட்டிங் ஆர்டரை மாற்றும் இந்திய அணி… ஆஸ்திரேலியாவுடன் நாளை 2ஆவது டெஸ்ட் தொடக்கம்

எனினும், பிர்லா குழுவின் பொறுப்புகளை ஏற்கும் முன், ஆர்யமான் கிரிக்கெட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மத்தியப் பிரதேசத்தின் ரேவாவுக்கு (ஆதித்ய பிர்லா குழுமத்தின் சிமென்ட் யூனிட்டின் தலைமையகம் அமைந்துள்ள இடத்தில்) சென்றபோது அவரது கிரிக்கெட் பயணம் தொடங்கியது. அங்கு அவர் 2017-18 சீசனில் மத்திய பிரதேசத்திற்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். நவம்பர் 2017 இல் ஒடிசாவுக்கு எதிரான தனது முதல் சீனியர்-லெவல் போட்டியில், அவர் 67 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அடுத்த ஆண்டு ஈடன் கார்டனில் பெங்கால் அணிக்கு எதிராக அவருக்கு பெரிய இடைவெளி கிடைத்தது. ஆர்யமான், 189 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார், இதன்மூலம் தோல்வியின் விளிம்பில் இருந்த தனது அணியை டிரா செய்ய உதவினார்.

விளம்பரம்

ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ-விடம் பேசுகையில், ஆர்யமான் ரேவாவுக்கு முதலில் வந்தபோது, ​​தனது பிரபலமான குடும்பப்பெயரால் அறியப்பட்டார், ஆனால் அவரது கிரிக்கெட் மூலம் பிர்லா பெயரின் நிழல் இல்லாமல் தனக்கென ஒரு பெயரை உருவாக்க முடிந்தது என்பதை விளக்கினார். அவர் மேலும் கூறுகையில், இதுவே இதுவரை தனது மிகப்பெரிய சாதனையாகும் என்றார்.

Also Read :
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வியை மறுத்த தாலிபான் – குரல் கொடுத்த ரஷீத் கான்

ரஞ்சி கோப்பையில் அவரது முக்கியமான ஆட்டத்தை தொடர்ந்து, ஆர்யமான் 2018 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இரண்டு சீசன்களுக்கு அவர் ராஜாஸ்தான் அணியில் தொடர்ந்த போதிலும், அவர் பதினோரு பேர் கொண்ட விளையாடும் அணியில் இடம் பெறவில்லை. பின்னர், அவரது காயத்திற்குப் பிறகு, நவம்பர் 2019 இல் ராஜஸ்தான் அணி அவரை விடுவித்தது. இறுதியில் அவர் அதே ஆண்டு டிசம்பரில் “கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற ஓய்வு பெறுவதாகவும்” அறிவித்தார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

டெல்லி செல்லும் போராட்டம் – ‘ஜோடி பேரணி’யை தொடங்கும் பஞ்சாப் விவசாயிகள்! | march to Delhi Punjab Police holds talks with farmers union leaders

Next Post

உலகளவில் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்களில் ஒரே ஒரு இந்திய நகரம்! | Only one Indian city made it to 2024s Worlds top 100 cities list

Next Post
உலகளவில் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்களில் ஒரே ஒரு இந்திய நகரம்! | Only one Indian city made it to 2024s Worlds top 100 cities list

உலகளவில் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்களில் ஒரே ஒரு இந்திய நகரம்! | Only one Indian city made it to 2024s Worlds top 100 cities list

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin