இழப்பீடு அறிவிப்பு!
இந்த விவகாரம் மிகப் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ள நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் அம்மாநில முதல்வர் பகவந்த் மான்-ன் அரசுதான் இதற்கு காரணம் எனக் குற்றம்சாட்டின.
இந்நிலையில், மராரி கலான் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினரை இன்று (மே 13) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதுடன், அவர்களது குழந்தைகளின் கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.
இத்துடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வேலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் அரசு உதவி செய்யும் எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் கள்ளச்சாராயம் விற்கும் யாரும் மாநில அரசின் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது எனவும் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

