• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

2030 வரை உலக வெப்ப நிலை உச்சத்திலேயே இருக்கும்: ஐநா தகவல் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக வெப்பநிலை அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் உச்ச அளவுகளில் அல்லது அதற்கு அருகிலேயே தொடரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், வருடாந்திர சராசரி வெப்பநிலை தொழில்துறை புரட்சிக்கு முன்பிருந்த காலத்தை விட அதிகபட்சமாக 1.9°C வரை உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்று PA Media/dpa செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய காலநிலை கணிப்புகளின்படி, 2026 முதல் 2030 வரை பூமியின் மேற்பரப்பிற்கு அருகிலான சராசரி வருடாந்திர வெப்பநிலை 1850-1900 கால சராசரியை விட 1.3°C முதல் 1.9°C வரை அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் இங்கிலாந்தின் மெட்ஆபிஸ் (Met Office) மேற்கொண்ட ஆய்வில், 2030க்கு முன் வரும் ஆண்டுகளில் ஒன்றாவது இதுவரை பதிவான மிக அதிக வெப்பமான ஆண்டாக மாறும் சாத்தியம் 86 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பதிவான சாதனை வெப்பநிலை, உலக நாடுகள் ஒப்புக்கொண்ட 1.5°C வரம்பை — அதாவது உலக வெப்பமயமாதலின் மிக ஆபத்தான விளைவுகளைத் தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட அளவை — தற்காலிகமாக மீறிய பின்னணியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

WMO மற்றும் Met Office ஆய்வின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஒரு ஆண்டாவது மீண்டும் 1.5°C அளவை மீறும் வாய்ப்பு 91 சதவீதம் உள்ளது.

மேலும், 2026-2030 காலப்பகுதியின் ஐந்து ஆண்டு சராசரி வெப்பநிலை 1.5°C-ஐ மீறும் சாத்தியம் 75 சதவீதம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காலநிலை மாதிரிகள் உலக சராசரி வெப்பநிலை 2030க்கு முன்பே 2°C-ஐ கூட மீறக்கூடும் எனக் காட்டினாலும், இது “மிக அபூர்வமான” சாத்தியம் என்றும், அதற்கான வாய்ப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், அடுத்த ஐந்து குளிர்காலங்களில் ஆர்க்டிக் பகுதியில் வெப்பநிலை 1991-2020 சராசரியை விட 2.8°C அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வை விட மூன்றரை மடங்கு அதிகமான மாற்றமாகும்.

அதேபோல், வட ஐரோப்பாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் கனமழை கொண்ட குளிர்காலங்கள் ஏற்படக்கூடும் என்றும், இதனால் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், உலக நாடுகள் உலக வெப்பமயமாதலை தொழில்துறை புரட்சிக்கு முன்பிருந்த அளவை விட 2°C-க்கு கீழே வைத்திருக்கவும், 1.5°C-க்குள் கட்டுப்படுத்த முயற்சிக்கவும் உறுதியளித்தன. இதன் நோக்கம் கடல் மட்ட உயர்வு, வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் கடுமையான புயல்கள் போன்ற காலநிலை மாற்ற விளைவுகளைத் தவிர்ப்பதாகும்.

2024ஆம் ஆண்டு, உலக சராசரி வெப்பநிலை முதன்முறையாக 1850-1900 கால சராசரியை விட 1.5°C அதிகரித்தது. இதற்கு மனிதர்களால் உண்டாக்கப்பட்ட உலக வெப்பமயமாதலுடன், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட “எல் நினோ” (El Nino) காலநிலை நிகழ்வும் காரணமாக இருந்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகள் 1.5°C-க்கு மேல் இருக்கும் வாய்ப்பு இருப்பது, அந்த வரம்பு நிரந்தரமாக மீறப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. ஏனெனில் நீண்டகால உலக வெப்பநிலை மாற்றம் 20 ஆண்டுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

விஞ்ஞானிகள் கூறுவதாவது, தற்போது உலக வெப்பநிலை தொழில்துறை புரட்சிக்கு முந்தைய 1850-1900 காலத்தை விட சுமார் 1.4°C அதிகமாக உள்ளது. அக்காலத்திலிருந்தே பெருமளவில் நிலக்கரி, எண்ணெய் போன்ற பாசிச எரிபொருட்களின் எரிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

WMO மற்றும் Met Office ஆய்வின்படி, மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வெப்பநிலை கணிப்புகள் “எல் நினோ” போன்ற காலநிலை நிலைமைகள் உருவாகும் சாத்தியத்தை காட்டுகின்றன. குறிப்பாக 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் இது அதிகமாக இருக்கும்.

அறிக்கையின் முதன்மை ஆசிரியரான லியான் ஹெர்மன்சன் கூறியதாவது:

“2026 இறுதியில் எல் நினோ உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 2027ஆம் ஆண்டு அடுத்த சாதனை வெப்பமான ஆண்டாக மாறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.”

இந்த உலகளாவிய வருடாந்திர மற்றும் பத்தாண்டு காலநிலை புதுப்பிப்பு அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் WMO மூலம் வெளியிடப்படுகிறது; இதை Met Office தயாரிக்கிறது.



Read More

Previous Post

தீ விபத்தில் பலியான குழந்தைகள் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள்! விசாரணையில் சிக்கிய தந்தை

Next Post

Tamilmirror Online || ’பசுமை வழி’யில் சிக்கிய 14 சீனர்கள்

Next Post
Tamilmirror Online || ’பசுமை வழி’யில் சிக்கிய 14 சீனர்கள்

Tamilmirror Online || ’பசுமை வழி’யில் சிக்கிய 14 சீனர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin