ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலை ஈரான் ஆதரித்தது. காரணம் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான பகை. ஈரான் ஷியாக்களின் நாடு. ஈராக்கில் ஷியாக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களாகவே நசுக்கப்பட்டனர். அதிகார மையநீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். சமூக, பொருளாதார அரசியலில் சன்னி அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆட்சி அதிகாரம் முழுவதுமாக சன்னி அரேபியர்களிடம் இருந்தது. சன்னி இஸ்லாமை சேர்ந்த சதாம் உசேனும், பாத் கட்சியும் இந்த அதிகார ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்தின. இதுவே, ஈரானுக்கும்- ஈராக்கிற்கும் நிரந்தர மோதலை உருவாக்கியது.

