2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, பரீட்சை திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
மேலும், இந்த விதிமுறைக்கு இணங்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 2,312 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

