2024 ஐபிஎல் தொடரில் புதிய பங்களிப்பை செய்யவிருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்துள்ளார்.
கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. அதன் பிறகு தோனி விளையாடும் ஒவ்வொரு ஐபிஎல் சீசனின் போதும் ‘இது அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்றது. அப்போது, இது தான் தோனியின் இறுதி ஐ.பி.எல். தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் பங்கேற்று விளையாடிய ஒவ்வொரு மைதானத்திலும் சிஎஸ்கே-வுக்கு ஆதரவாக விசில் சத்தம் அதிகம் பறந்தது. இதன் காரணமாக, தான் தற்போது ஓய்வுப்பெறுவதாக இல்லை என்று தோனி தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தற்போது தோனி தனது சமூக வலைதளத்தில் கொடுத்துள்ள அப்டேட் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் பயணிப்பதற்கு காத்திருக்க முடியவில்லை என்றும், அப்டேட்டுக்கு காத்திருங்கள் என்றும் தோனி பதிவிட்டுள்ளார். இதனை தோனியின் மிகச் சிறந்த சிக்ஸர்களையும் ஸ்டெம்பிங்குகளையும் பதிவிட்டு MS DHONI என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்…
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…