கல்வியைத் தொடர்ந்து ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ரெனால்ட்ஸ் சமூகக் கல்லூரியிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1991 ஆம் ஆண்டு கஸாலா ஹாஷ்மி தனது கணவர் அசார் ரஃபீக்குடன் ரிச்மண்ட் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இந்த தம்பதியருக்கு யாஸ்மின் மற்றும் நூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
அரசியல் அனுபவமே இல்லாத கஸாலா ஹாஷ்மி, 2019 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

அதன் பலனாக, 2024 ஆம் ஆண்டு செனட் கல்வி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவி, குழந்தைப் பேறு உரிமை மற்றும் பொதுக் கல்விக்கான உரிமை ஆகிய இரண்டு முக்கியமான ஜனநாயக முன்னுரிமைகளை உள்ளடக்கிய முக்கிய தலைமைப் பதவியாகும்.
இதுதவிர, தனது பதவிக்காலத்தில் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நீதித்துறை போன்ற துறைகளில் சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளார். அதன் மூலம் பிறரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்துள்ளார்.

