Last Updated:
ஜம்முவில் திருமண நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லாவை கமல் சிங் ஜம்வால் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்முவின் கிரேட்டர் கைலாஷில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லா ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
அங்கிருந்து திரும்பும்போது, திடீரென ஒருவர் பரூக் அப்துல்லாவை நெருங்கி பின்னங் கழுத்தில் துப்பாக்கியை வைத்து சுட முயன்றார். இப்படியான ஒரு தருணத்திற்காக 20 ஆண்டுகளாக காத்திருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
BREAKING: An assassination attempt on Farooq Abdullah was foiled at a wedding function in Jammu. An armed attacker reached close range and fired, but security personnel deflected the shot. The assailant has been arrested. No one was injured. pic.twitter.com/Df0iTk4yf6
— News Algebra (@NewsAlgebraIND) March 11, 2026
இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டவர் பெயர் கமல் சிங் ஜம்வால் என்பதும், அவர் ஜம்முவின் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. Z-பிளஸ் பாதுகாக்கப்பு உள்ள ஒரு தலைவரை மிக அருகில் சென்று ஒருவர் தாக்க முயன்றது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Mar 12, 2026 11:13 AM IST
20 ஆண்டுகள் காத்திருப்பு.. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு… நூலிழையில் உயிர் தப்பிய ஃபரூக் அப்துல்லா


