தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறையினர், மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து கடந்த 01.04.2023 முதல் நடத்திய அதிரடி சோதனையில், முறையாக மருத்துவப் பட்டயப் படிப்பு படிக்காமலும், போலி உரிமம் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 28 போலிமருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் புதுக்கோட்டையில் 4 பேரும், பெரம்பலூரில் 3 பேரும், அரியலூரில் 4 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், திருவாரூரில் 10 பேரும், நாகப்பட்டினத்தில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

