ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய அணியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக விளங்கும் விராட் கோலி, ஐபிஎல் தொடர்களில் இதுவரை 250 போட்டிகளில் விளையாடி, 8 சதங்கள், 55 அரை சதங்களுடன் 7,924 ரன்களை குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 538 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார். ஆனால், அவருக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ராசியில்லாத நாளாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி டக் அவுட்டான விராட் கோலி, 2022ஆம் ஆண்டில் இதே நாளிலும் டக் அவுட் ஆனார். அத்துடன், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதியும் விராட் கோலி டக் அவுட் ஆனார்.
ஏப்ரல் 23ஆம் தேதி விராட் கோலிக்கு எவ்வளவு ராசியில்லாத நாளாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ராசியான நாளாக மே 18ஆம் தேதி அவருக்கு இருக்கிறது. கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலி, 2016ஆம் ஆண்டும் பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் விளாசினார்.
இதையும் படிக்க:
சென்னை – பெங்களூரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்னவாகும்? யாருக்கு சாதகம்?
அதேபோல், 2015ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக அரைசதம் அடித்து, மே 18ஆம் தேதி தனக்கு மிகவும் ராசியான நாள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் கோலி.
அதேபோல், விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 தான். இதனால், கோலியின் ரசிகர்கள் இன்றைய நாளை மிகவும் ஆவலுடனும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
