Last Updated:
வாரணாசியில் 19 வயது பெண்ணை 7 நாட்களில் 23 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று 7 நாட்களில் 23 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வடக்கு வாரணாசியில் உள்ள லால்பூர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். கடந்த மாதம் 29ம் தேதி தனது தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில், கடந்த 4 ஆம் தேதி போலீசில் புகார் செய்தனர்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் அந்த இளம்பெண் பாண்டேபூர் பகுதியில் போதையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். சம்பவத்தன்று தனது தோழியை பார்க்க சென்றபோது தனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அவர் அந்த பெண்ணை தனது இரு சக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அவரை நடேசர் பகுதியில் விட்டு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு கடத்திச் சென்று போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். தொடர்ந்து மறுநாள் 3 பேர் அதே ஹோட்டலுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் வேறு சிலர் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த நூடுல்ஸ் வாங்கிக் கொடுத்து அவர் மயங்கியதும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவ்வாறு 7 நாட்களுக்குப் பிறகு அந்த பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் போதை தெளிந்து அந்த பெண் தனது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார்.
போதைப்பொருள் தாக்கத்தால் தூங்கிய அவர் மறுநாள் தான் வீட்டுக்கு சென்று தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறியிருக்கிறார். தன்னை 7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் அளித்த புகாரின பேரில் தீவிர நடவடிக்கையில் இறங்கிய போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுயைில் ஈடுபட்டவர்களில் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிலர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த கொடுமையான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தையே உலுக்கி எடுத்துள்ளது.
Varanasi,Uttar Pradesh
April 09, 2025 3:21 PM IST


