Last Updated:
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் இந்தியா U19 B அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா பி அணியில் ராகுல் டிராவிட்டின் மகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத் திறமைகளைக் கண்டறியும் விதமாக, பிசிசிஐ-யின் உயர்திறன் மையம் (CoE) அமைந்துள்ள பெங்களூருவில் வரும் நவம்பர் 17 முதல் 30 வரை முத்தரப்பு U19 தொடர் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா U19 A, இந்தியா U19 B மற்றும் ஆப்கானிஸ்தான் U19 ஆகிய அணிகள் மோதுகின்றன. வளர்ந்து வரும் வீரரான விஹான் மல்ஹோத்ரா இந்தியா U19 A அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் அபிக்யான் குண்டு அணியின் துணைக் கேப்டனாகச் செயல்படுவார்.
இந்த அணியில் இடம் பெற வேண்டிய வைபவ் சூர்யவன்ஷி (ACC Rising Stars Asia Cup) மற்றும் ஆயுஷ் மாத்ரே (ரஞ்சி டிராபி) ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்கள் வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளதால் மல்ஹோத்ராவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் இந்தியா U19 B அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த U19 B அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் திராவிட்டின் மகன் அன்வாய் திராவிட் விக்கெட் கீப்பராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
November 11, 2025 9:04 PM IST


