சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. அவருக்குப் பதிலாகச் சீன உயர்மட்ட ஷெர்பா (Sherpa) குழு பங்கேற்கிறது. இதே போன்று, பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். நாளை மறுநாள் அனைத்து வெளிநாட்டு அமைச்சர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச உள்ளனர்.


