Last Updated:
நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் இந்தத் திட்டத்தை ஆதரித்தன.
டென்மார்க் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
டென்மார்க்கில் சிறார்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் ஆகியவை அடங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் டென்மார்க் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் பகுப்பாய்வின்படி, நாட்டில் உள்ள இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 மணி நேரம் 40 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் தனது தொடக்க உரையில் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த கவலைகள் காரணமாக, சிறார்களுக்கான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவை நமது குழந்தைகளின் நேரம், குழந்தைப் பருவம் மற்றும் நல்வாழ்வைத் திருடுவதில் செழித்து வளர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் கரோலின் ஸ்டேஜ் ஓல்சன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் இந்தத் திட்டத்தை ஆதரித்தன. கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த ஆஸ்திரேலியாவைப் போலவே டென்மார்க்கும் பின்பற்றியுள்ளது.
November 08, 2025 8:25 AM IST
15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. டென்மார்க் அரசு அதிரடி உத்தரவு!


