எனவே, இந்த மலையோடு தொடர்புடைய ரத்த வழி மட்டுமே நாட்டை ஆளும் தார்மீக உரிமையைக் கொண்டது என்பது அவர்களின் வாதம். வடகொரியா தலைவர்கள் வெறும் மனிதர்களாகப் பார்க்கப்படாமல், ஒருவித தெய்வீகப் பிறவிகளாக சித்தரிக்கப்படுகிறது. உதாரணமாக, இரண்டாம் தலைவரான கிம் ஜாங் இல் பிறந்தபோது, வானத்தில் இரண்டு வானவில்கள் தோன்றியதாகவும், ஒரு புதிய நட்சத்திரம் உதயமானதாகவும் வடகொரிய பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்படுகிறது.


