இருவரும் சந்தித்த பின் திருமண ஏற்பாடுகள் மற்றும் எதிர்காலம் குறித்து பேசியுள்ளனர். தொடர்ந்து இருவரும் செல்போனில் உறவை வளர்த்த நிலையில், திடீரென திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பு தெரிவிப்பதாக ரேஷ்மா கூறியுள்ளார். இதனால், எதிர்ப்பையும் மீறி ரேஷ்மாவை கரம் பிடிக்க பஞ்சாயத்து உறுப்பினர் முடிவு செய்தார். அதற்கு ரேஷ்மா பச்சைக் கொடி காட்டியதும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திருமண நடைபெற இருந்தது.
மணப்பெண்ணை ஜோடித்து வார்டு உறுப்பினர் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரேஷ்மா வைத்திருந்த பேக் அவரின் கையில் சிக்கியுள்ளது. அதில் இருந்த சர்டிபிகேட்டை பார்த்ததும் வார்டு உறுப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளார். அது, ரேஷ்மாவுக்கு 45 நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் திருமணம் நடைபெற்றதான் மேரேஜ் சர்டிபிகேட். இருந்த போதும் அதைக் வெளியே காட்டிக் கொள்ளாத மணமகன், அந்த தகவலை உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் மூலம் ஆர்யநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்திற்கு சென்றதும் மணப்பெண்ணை, உறவினர்களுக்கு பதில் போலீசார் வரவேற்றனர். அதைக் கண்டதும் தான் கையும், களவுமாக மாட்டிக் கொண்டதை ரேஷ்மா உணர்ந்துள்ளார். பின்னர், மணமகளின் மாலையை கழற்றிய போலிசார், அவருக்கு கை விலங்கு போட்டு சிறையில் விருந்து வைக்க அழைத்துச் சென்றனர். ரேஷ்மாவிடம் மேற்கொண்ட விசாரணையில் போலீசாருக்கு தலைசுற்றும் அளவிற்கு பல்வேறு உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரமற்றம் பகுதியை சேர்ந்த ரேஷ்மாவுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளது தெரியவந்தது. இவர், மேட்ரிமோனியில் வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளார். திருமணம் முடிந்த கையுடன் மணமகளின் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாவதை தனது ஃபார்முலாவாக கொண்டிருந்துள்ளார். இதுபோன்று, இதுவரை 10 பேரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
அதில், 7 பேருடன் முறையாக திருமணம் செய்து, அதற்கு உரிய சான்றிதழையும் ரேஷ்மாக கைவசமாக வைத்துள்ளார். பிரச்சினையை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு திரிந்தவர், அதன் மூலமே தற்போது வசமாக சிக்கியுள்ளார். 11 ஆவதாக எர்ணாகுளத்தில் வார்டு உறுப்பினரை ஏமாற்றி கரம் பிடிக்க இருந்த ரேஷ்மா, அடுத்த மாததே 12 ஆவதாக வோறொரு ஆணுடன் திருமணம் செய்ய திட்டமிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மேலும் வேறு யாரையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளாரா, இந்த மோசடியில வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 10 பேரை ஏமாற்றிய நிலையில், 11 ஆவது திருமணத்துக்கு தயாரான கல்யாணி ராணி, கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
June 07, 2025 9:31 PM IST
11 ஆவது திருமணம் செய்ய வந்த கல்யாண ராணி… மண்டபத்தில் ஆசை ஆசையாக நுழைந்த உடன் காத்திருந்த அதிர்ச்சி

