• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ.. வெற்றிக்காக திருப்பதியில் தரிசனம் செய்த நாராயணன்!

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ.. வெற்றிக்காக திருப்பதியில் தரிசனம் செய்த நாராயணன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 28, 2025 12:35 PM IST

கடந்த 1979 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு கழகம் ஒரு சிறிய விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவரை ஆறு விதமான ஏவு ஊர்திகளை ஆய்வு செய்துள்ள இஸ்ரோ நாளை நூறாவது விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.

ISRO narayananISRO narayanan
ISRO narayanan

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாளை 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருக்கும் நிலையில், அதன் பயணம் வெற்றி அடைய இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஒவ்வொரு முறையும் புதிய விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலிலும், சூலூர் பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலிலும் சாமி கும்பிட்டு விண்கலத்தின் பயணம் வெற்றி அடைய வேண்டிக் கொள்வது வழக்கம். அதனைப் பின்பற்றி இஸ்ரோ தலைவராக புதிதாகப் பொறுப்பிற்கு வந்துள்ள நாராயணன், நாளை 100வது விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ இருக்கும் நிலையில் இன்று திருப்பதி வந்து ஏழுமலையானை வழிபட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், “கடந்த 1979 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு கழகம் ஒரு சிறிய விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவரை ஆறு விதமான ஏவு ஊர்திகளை ஆய்வு செய்துள்ள இஸ்ரோ நாளை நூறாவது விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது. நாளை விண்ணில் செலுத்தப்பட இருக்கும் இரண்டாவது தலைமுறை ‘நேவிகேஷன் சேட்டிலைட்’ என்று கூறப்படும் இந்த ‘சேட்டிலைட்’ பொதுமக்களுக்கு பல்வேறு வகையான பயன்பாடுகளை கொடுக்கும். நம்முடைய நாடு 7500 கி.மீ நீள கடற்கரையைக் கொண்டது. இந்திய மீனவர்கள் பயன்படும் வகையில் மீன்வளம் எங்கு இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை இஸ்ரோ அவர்களுக்கு தெரிவிக்கிறது.

இதன் மூலம் நமக்கு சுமார் 34,000 கோடி ரூபாய் உபரி வருமானம் கிடைக்கிறது. மேலும், மீனவர்கள் எல்லை தாண்டி சென்று விடாமல் தடுக்க மொபைல் செயலி ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் இந்திய கடல் எல்லை பற்றி அவ்வப்போது மீனவர்களுக்கு தகவல்களை அளித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரோ இதுவரை நாட்டு மக்களுக்கு தேவையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளது. இப்போதுதான் இஸ்ரோ வணிக ரீதியான செயல்பாடுகளில் அடி எடுத்து வைத்துள்ளது.

Also Read | சதமடிக்கும் இஸ்ரோ.. 100-வது ராக்கெட் செலுத்த உள்ள செயற்கைக்கோள்.. இத்தனை அம்சங்களா?

சர்வதேச அளவில் இஸ்ரோவின் வணிக ரீதியான செயல்பாடு இரண்டு சதவீதமாக மட்டுமே உள்ளது. அதனை 8% ஆக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடியின் ஆலோசனை பேரில் மேற்கொண்டு வருகிறோம். குலசேகரப்பட்டினத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் இரண்டாவது ஏவுதளம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வரும். அங்கிருந்து சிறிய விண்கலங்கள், தனியார்களின் விண்கலங்கள் ஆகியவை விண்ணில் ஏவப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளத்தை கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்தால் இங்கிருந்து சுமார் 30,000 கிலோ வரை எடையுள்ள அடுத்த தலைமுறை விண்கலங்களை விண்ணில் செலுத்த முடியும்” என்று அப்போது கூறினார்.

Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

January 28, 2025 12:30 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ.. வெற்றிக்காக திருப்பதியில் தரிசனம் செய்த நாராயணன்!

Read More

Previous Post

முதலைகள் மூலம் இலங்கைக்கு கொட்டப்போகும் வருமானம் : தயாராகிறது திட்டம்

Next Post

காலணி, தோல் துறை மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம்: மத்திய பட்ஜெட் | Special scheme for development of footwear and leather sector Union Budget

Next Post
காலணி, தோல் துறை மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம்: மத்திய பட்ஜெட் | Special scheme for development of footwear and leather sector Union Budget

காலணி, தோல் துறை மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம்: மத்திய பட்ஜெட் | Special scheme for development of footwear and leather sector Union Budget

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin