
Last Updated:
தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் தடங்கல், மாசு என அனைத்து பருவக் காலத்தையும் ஆம் ஆத்மி அவசரகாலமாக மாற்றிவிட்டது.
டெல்லிக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்தியா அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இல்லாமல் போட்டியிடுகின்றன. எனவே டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவ இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் துவக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுதலை செய்தார். இதன் பிறகு பாஜக சார்பாக பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், “ஆம் ஆத்மி, டெல்லி மக்களின் 10 வருட வாழ்வை நாசமாக்கிவிட்டது வருத்தமாக உள்ளது. டெல்லியின் பல்வேறு இடங்களும் வாகன நெரிசலால் சிக்கித் தவிப்பதால், ஆட்டோக்களும் டாக்ஸிகளும் வர மறுக்கின்றன.
சிஏஜி ரிப்போர்ட்டின் அடிப்படையில் முக்கிய நாளிதழ் ஒன்று இன்று ஷீஷ் மஹாலின் செலவினத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது. கொரோனா காலத்தில் டெல்லி மக்கள் போராடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் (ஆம் ஆத்மி) ஷீஷ் மஹால் கட்டுமானத்தில் கவனம் செலுத்தினர். அவர்கள் டெல்லி மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை.
தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் தடங்கல், மாசு என அனைத்து பருவக் காலத்தையும் ஆம் ஆத்மி அவசரகாலமாக மாற்றிவிட்டது. ஆம் ஆத்மிக்கு டெல்லி மக்களின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. இன்றும் கூட டெல்லியின் அனைத்து வளர்ச்சியும் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள் இன்று டெல்லியின் அனைத்து மூலைகளுக்கும் செல்கிறது. இது பாஜகவால் நடந்தது. அதேபோல், நமோ ரயில் சேவை, நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் என அனைத்தும் மத்திய அரசால் செய்யப்பட்டது. பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம், ஏழை குடும்பங்கள் வீடு கட்ட மத்திய அரசு பணம் கொடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : வாலி படம் அஜித் போல் இரட்டையர்கள்.. திருமணமான புது பெண் மரணத்திற்கு காரணம் என்ன?
எனவே டெல்லி மக்களின் ஒளிமையான எதிர்காலத்திற்கு பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவால் தான் டெல்லியை வளர்ச்சி அடைய செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.
January 05, 2025 6:39 PM IST

