10 வருடத்தில் உங்களுடைய சொத்து மதிப்பு குறைந்ததா..? உயர்ந்ததா..? அக்ஷத் ஸ்ரீவஸ்தவா சொல்லும் ஷாக் கணக்கு!
இந்தியாவில் கடந்த 10 வருடத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை என்பது மக்களின் வருமான வளர்ச்சியை காட்டிலும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள என்றால் மிகையில்லை. உதாரணமாக 2016ல் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருட்களின் விலையில் 2026ல் சுமார் 160 ரூபாய்க்கு விற்கப்பட்டு இருக்கும்.
இதன் மூலம் கடந்த 10 வருடத்தில் நாட்டின் பணவீக்கம் என்பது 60 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. பொருளாதார அடிப்படையில் குறைந்தபட்சம் பணவீக்கத்திற்கு இணையான வளர்ச்சியை வருமானத்தில் பெற வேண்டும், இப்படி இல்லையெனில் ஆட்டோமேட்டிக் ஆக உங்களுடைய சொத்து மதிப்பு, வருமானத்தின் மதிப்பு என்பது குறையும்.

இந்தியாவில் கடந்த 10 வருடத்தில் பெட்ரோல் விலை 65 ரூபாயில் இருந்து 111 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை 500 ரூபாயில் இருந்து 912 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. பால் விலை 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. தங்கம் விலை 28000 ரூபாயில் இருந்து 1.50 லட்சம் ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் உங்களுடைய வருமானம் 50 -60 சதவீதம் வரையில் உயரவில்லை எனில் பணவீக்கம் உங்களுடைய வருமானத்தை மொத்தமாக திண்றவிடும். இதை தான் சொத்து மதிப்பு குறைகிறது என அக்ஷத் ஸ்ரீவஸ்தவா.
இதை சமாளிக்க உங்களுடைய பணத்தை வெறும் பணமாக வைத்திருக்காமல் நாட்டின் பணவீக்கத்தை விட அதிக வருமானம் கொடுக்கும் சொத்துக்களில் முதலீடு செய்தால் கட்டாயம் உங்களுடைய சொத்து மதிப்பு உயரும்.
உதாரணமாக பங்குச்சந்தை, மியூச்சுல் பண்ட், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ஆனால் இங்கேயும் ஒரு பிரச்சனை உள்ளது.
பணவீக்க பாதிப்பை குறைக்க இத்தகைய முதலீடு செய்தாலும், ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் இழக்கும் போதும் நாம் நம்முடைய purchasing power-ஐ இழக்கிறோம், இதை யாரும் கவனிப்பது இல்லை. இதை சரி செய்தால் மட்டுமே நிலையான வருமானத்தையும், ஸ்திரமான சொத்துக்களையும் உருவாக்க முடியும்.
இதற்காக அக்ஷத் ஸ்ரீவஸ்தவா சொல்லும் ஐடியா தான் ஸ்டேபிள் கரன்சியில் முதலீடு என்பது.
அதாவது ரூபாயை காட்டிலும் ஸ்திரமான நாணயம் உதாரணமாக டாலரில் முதலீடு செய்யும் போது உங்களுடைய சொத்து மதிப்பின் வளர்ச்சி என்பசு வேகமாக உயர்வது மட்டும் அல்லாமல் இழப்பை ஏற்படாமல் பாதுக்காக்கும் என தெரிவித்தார்.
இத்தகைய முறை உங்களுடைய வாழ்வை தாண்டி அடுத்த தலைமுறைக்கான சொத்துக்களை உருவாக்க உதவும். இப்போ சொல்லுங்க 10 வருடத்தில் உங்களுடைய சொத்து மதிப்பு குறைந்ததா..? உயர்ந்ததா..?
