`Tethered Spinal Cord’ எனச் சொல்லப்படக்கூடிய நிலையே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதுகுத்தண்டு வழக்கத்துக்கு மாறாகச் சுற்றியுள்ள திசுக்களுடன் இணைக்கப் பட்டிருக்கும்போது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இந்த நிலை உண்டாகிறது. இதில் எவ்வித அசைவும் இருக்காது.
தன் குழந்தையின் வாலை அகற்றும்படி மருத்துவர்களிடம் பெற்றோர்கள் கூறியபோது, அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இந்த வால் குழந்தையின் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அதை அகற்றுவது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.
ஏற்கெனவே தென் அமெரிக்கா கயானாவில் கடந்த ஜூன் மாதம் வாலோடு பிறந்த 10 நாள்களேயான குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வாலை அகற்றி இருந்தனர். அதேபோல தற்போது இக்குழந்தை வாலோடு பிறந்துள்ளது.