• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

10 ஆண்டுகளாக கணவன் கொடுத்த டார்ச்சர்.. பெற்ற குழந்தையோடு அரசுப் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
10 ஆண்டுகளாக கணவன் கொடுத்த டார்ச்சர்.. பெற்ற குழந்தையோடு அரசுப் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 27, 2025 10:27 PM IST

ராஜஸ்தான் ஜோத்பூரில் கணவர் குடும்பத்தார் 10 ஆண்டுகளாக கொடுத்த வரதட்சணை கொடுமையால் பெண் தனது 3 வயது குழந்தையுடன் விபரீத முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

ராஜஸ்தானில், கணவன் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால், தனது 3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பெண் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் யஷஸ்வி என்ற குழந்தை இருந்தது.

சஞ்சு பிஷ்னோய் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். திருமணமாகி 10 வருடங்கள் கடந்த பின்னும், சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை விவகாரம் தொடர்பாக அடிக்கடி குத்திக் காண்பித்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சஞ்சு கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை சஞ்சுவின் கணவர் திலீப் அவரை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அப்போது கணவன்-மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் கேனில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.

2 பேர் மீதும் தீ பற்றி எரிய அவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் மீது கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயைப் போராடி அணைத்த அவர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய் சஞ்சுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்களது மகள் உயிரிழப்பு குறித்து சந்தேகம் தெரிவித்துள்ள சஞ்சுவின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கணவர் திலீப், மாமியார் உள்ளிட்டோர் தங்களது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் குடும்பத்தாரின் தொடர் டார்ச்சரால் தனது 3 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு, ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 27, 2025 10:27 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

10 ஆண்டுகளாக கணவன் கொடுத்த டார்ச்சர்.. பெற்ற குழந்தையோடு அரசுப் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

Read More

Previous Post

இளைஞர் குத்திக்கொலை :மூவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை

Next Post

சபா மாநிலத் தேர்தலில் வாரிசான் தனித்து போட்டியிடும்: ஷாஃபி அப்டால் | Makkal Osai

Next Post
சபா மாநிலத் தேர்தலில் வாரிசான் தனித்து போட்டியிடும்: ஷாஃபி அப்டால் | Makkal Osai

சபா மாநிலத் தேர்தலில் வாரிசான் தனித்து போட்டியிடும்: ஷாஃபி அப்டால் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin