நன்னீர் மீன்களை விட, கடல் மீன்கள் பெரும் பகுதிகளில் அதிகமாக கிடைப்பதால் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்களையே விரும்பி உண்ணுகின்றனர். கடல் மீன்களைப் போலவே நன்னீர் மீன்களிலும் அதிக அளவிலான வைட்டமின்களும் புரதச்சத்துக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின் B12, நியாஸின் வைட்டமின் B6 மற்றும் பந்தோனிக் அமிலம் போன்றவை அடங்கியுள்ளன.
இவ்வகையான நன்னீர் மீன்களை வளர்ப்பதில் மக்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசும் பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து திறன்பட செயல்படுத்தி வருகின்றது. நன்னீர் மீன்களில் உயிர் மீன்கள் விற்பனைக்காக அரசின் மானியம் பெற்று தற்போது திருவாரூர் மாவட்டம் மேப்பளம் பகுதியில் சேர்ந்த விவசாயி விஜயன் என்பவர், கடந்த 13 ஆண்டுகளாக நன்னீரில் மீன்கள் வளர்த்து, அதிக அளவில் லாபம் பார்த்து வருகிறார். விவசாயத்தை காட்டிலும் பெருமளவில் மீன் வளர்ப்பில் லாபம் கிடைப்பதாக விஜயன் தெரிவித்தார்.
கெண்டை மீன் வகைகளான ரோகு, கட்லா, மிருகால் உள்ளிட்ட மீன் ரகங்களை பண்ணை குட்டைகளில் மூலம் வளர்த்து வரும் இவர், விவசாயத்தைக் காட்டிலும் ஆண்டு ஒன்றுக்கு சிறந்த லாபம் கிடைத்து வருவதாக தெரிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக அரசின் மானியத்தைப் பெற்று மீன் வளர்ப்பில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு ஏக்கரில் பண்ணை குட்டை மூலமாக 2,500 மீன்குஞ்சுகள் விடப்பட்டு 6 முதல் 8 மாதங்களில் சுமார் 1.50 டன் மீன்கள் நல்ல அளவில் வளர்ச்சி அடைந்ததும் அந்த மீன்களை விற்பனை செய்தும் அதன் மூலம் லாபம் ஈட்டி வருகிறார்.
இதையும் வாசிக்க: பனைமரம் அரசமரமாகும் அதிசயம்… ஒரே இடத்தில் இரண்டு மரமும் எப்படி வந்தது?
மீன் வளர்ப்பு குறித்து விவசாயி கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக பண்ணை குட்டைகள் மூலம் கெண்டை மீன்கள் வளர்த்து வருகிறேன் என கூறும் விஜயன், இயற்கை முறையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றேன் என்றும் சுமார் ஒரு ஏக்கரில் ஒன்றரை டன் முதல் ஆண்டொன்றிற்கு மீன்கள் என்னால் வளர்க்க முடிவதாக தெரிவித்தார்.மீன் வளர்ப்பிற்கு மத்திய அரசும், மாநில அரசும் பெருமளவிலான திட்டங்களையும் அதற்கான மானியங்களையும் வழங்குவதால் இத்தனை ஆண்டுகளாக மீன் வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ள முடிகிறது எனவும் அரசு மிகுந்த உதவியுடன் செயல்படுகிறது என்றும் விஜயன் தெரிவித்தார்.
மேலும், ரோகு, கட்லா உள்ளிட்ட மீன் ரகங்கள் அரசின் மானியம் பெற்ற உயிர் மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விற்பனை செய்து வருகிறேன் என கூறும் விஜயன், இதன் மூலம் எனக்கு பெருமளவிலான லாபம் கிடைக்கிறது என்றும் விவசாயத்தைக் காட்டிலும் பண்ணை குட்டை மூலம் மீன் வளர்ப்பில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டால் பெருமளவில் லாபம் இட்ட முடியும் எனக் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
