ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, இன்று பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் உலகத் தலைவர்களின் மெய்நிகர் சந்திப்பு உடனடிப் பலன்களைத் தர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தம் ஹவுஸின் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் யூரேஷியாவுக்கான இயக்குநர் கிரெகோயர் ரூஸை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானின் நிலையற்ற போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் நீரிணைவழியாக கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாப்பது குறித்து 40 நாடுகளின் தலைவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேசப் பணிக்குழு
இதன்படி நீரிணையை மீண்டும் திறப்பதற்காக உலகத் தலைவர்கள் ஒரு சர்வதேசப் பணிக்குழுவை அமைப்பார்கள் என்று பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முற்றிலும் தற்காப்பு நோக்கம் கொண்ட இந்தப் பணிக்குழுவில், சூழ்நிலைகள் அனுமதித்தவுடன் ஒரு ஒருங்கிணைந்த இராணுவ முயற்சியை ஈடுபடுத்துவதும் அடங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிபெற, அது மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ரூஸ் கூறியுள்ளார்.
இதன்படி அமெரிக்கா, மறைமுகமாகவாவது, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கப்பல் போக்குவரத்துத் துறையும் வளைகுடா நாடுகளும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், ஈரான் இதை எதிர்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா இடம்பெறவில்லை
குறித்த கலந்துரையாடலில் கெய்ர் ஸ்டார்மர், இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து உச்சிமாநாட்டை நடத்துவதற்காக இன்று பரீஸை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸும் இந்த உச்சிமாநாட்டிற்காக வெள்ளிக்கிழமை பாரிஸ் செல்வார் என ஜெர்மன் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

