ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற மூன்று வெவ்வேறு நாடுகளுக்குச் சேர்ந்த கப்பல்களை இன்று காலை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை திறந்துள்ளது என்றும், ஈரான் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக 10 எண்ணெய் கப்பல்கள் வெற்றிகரமாக கடந்து சென்றதாகவும் கூறியிருந்தார்.
கடுமையான எச்சரிக்கை
எனினும், அவரின் அந்த கூற்றுக்களை மறுத்துள்ள ஈரான் தரப்பு, அவை அனைத்தும் பொய்யான அறிக்கைகள் என தெரிவித்துள்ளன.

அதன்படி, ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது என்றும், அதில் செல்ல முயற்சிக்கும் எந்தக் கப்பலுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் எந்தக் கப்பல்களுக்கும் இந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

