ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது.
தவறினால் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
சக்திவாய்ந்த பதிலடி
இது தொடர்பாக ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையில் விதிகளைப் பின்பற்றத் தவறுதல், நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகுதல் அல்லது ஈரானின் வழிசெலுத்தல் நெறிமுறைகளைப் புறக்கணித்தல் போன்ற செயல்களுக்கு ஆயுதப் படைகளிடமிருந்து உடனடி மற்றும் சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit: ABC News
ஈரானால் அங்கீகரிக்கப்படாத ஒரு பாதையைப் பயன்படுத்திய போது, கடந்த புதன்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்தே, கதம் அல்-அன்பியா இராணுவத் தலைமையகத்திடமிருந்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

