ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் பாதுகாப்பு
ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹோர்முஸ் நீரிணை வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நீண்ட தூர அமெரிக்க ட்ரோனைத் துல்லியமாக அடையாளம் கண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இவ்வாறு அழித்துள்ளன.

இந்தநிலையில் தாக்குதலுக்கு இலக்கான ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்து பாரசீக வளைகுடா நீரில் மூழ்கியுள்ளதாக IRGC பொது உறவுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைப் படைகளுக்கும் ஈரானியப் படைகளுக்கும் இடையே கடற்படைத் தடைகள் மற்றும் இராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

