Last Updated:
தமிழ்நாட்டில் ஹோட்டல், டீக்கடைகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஹோட்டல், டீக்கடைகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிலிண்டர் கையிருப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு கூடுதல் மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை வழங்கப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பை பயன்படுத்துவதால் மானியம் வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் விறகுகளை எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் விறகுகள் பயன்படுத்தப்படுவதால் அரசு சலுகை வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாநில அரசு எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை பேசுகையில், “தமிழகத்தில் கையிருப்பு உள்ள பெட்ரோல், டீசல் 9 நாட்களுக்கு உள்ளது. ஒரே நாளில் 100% பெட்ரோல் விற்பனையும் 75 சதவீத டீசல் விற்பனையும் அதிகரித்துள்ளது. நேற்று விற்பனை 20% மற்றும் 21 சதவீதமாக குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறை நகர் பகுதியில் வினியோகம் செய்யப்படும். கிராமப்புற பகுதிகளில் 45 நாட்களுக்கு ஒரு முறை வீட்டு உபயோக சிலிண்டர் வழங்கப்படும். வீட்டு உபயோக சிலிண்டர்கள் இம்மாத இறுதிவரை ஸ்டாக் உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வணிகர் ரீதியான சிலிண்டர்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.


