• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல் | 8 Children Among 17 Of Family Killed In Hyderabad Fire,

GenevaTimes by GenevaTimes
May 18, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல் | 8 Children Among 17 Of Family Killed In Hyderabad Fire,
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அதி​காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைத​ரா​பாத்​தில் புகழ்​பெற்ற சார்​மி​னார் அருகே குல்​சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்​படு​கிறது. இந்த வளாகத்​தின் தரைதளத்​தில் நகைக் கடைகளும், மேல்​தளங்​களில் வீடு​களும் உள்​ளன. இங்கு நேற்று அதி​காலை 4 மணி அளவில் மின் கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டது.

சிறிது நேரத்​துக்​குள் வணிக வளாகம் முழு​வதும் தீ மளமளவென்று பரவியது. கட்​டிடம் முழு​வதும் தீயும், புகை​யு​மாக மாறியது. அதி​காலை நேரம் என்​ப​தால் அனை​வரும் தூக்​கத்​தில் இருந்​தனர். இதனால் பலர் மூச்​சு திணறி மயக்​கம் அடைந்​தனர். இதற்கிடையே, தகவல் கிடைத்து போலீ​ஸார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்​பு படையினர் விரைந்து வந்து மீட்​பு பணி​யில் ஈடு​பட்​டனர். 10 தீயணைப்பு வாக​னங்​கள், கிரேன்​கள் உதவி​யுடன் சுமார் 1 மணி நேரத்​துக்கு மேலாக போராடி தீ அணைக்​கப்​பட்​டது. இதற்​குள் வணிக வளாகத்​தின் மேல்​தளங்​களில் இருந்த 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர்உயி​ரிழந்​தனர். 10-க்​கும் மேற்​பட்​டோர் பலத்த தீக்​கா​யம் அடைந்​தனர். அருகில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் அவர்​கள் அனு​ம​திக்​கப்​பட்டுள்​ளனர். அவர்​களில் சிலரது நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: தீ விபத்து ஏற்​பட்ட குல்​சார் ஹவுஸ் வணிக வளாகத்​தின் தரை தளத்​தில் நகைக் கடைகள் உள்​ளன. அதற்கு மேல் உள்ள 2 தளங்​களில் வீடு​கள் உள்​ளன. தரை ​தளத்​தில் நகைக்​கடைகள் நடத்​தும் தொழில​திபர்​கள், ஊழியர்​கள் தங்​கள் குடும்​பத்​தினருடன் மேல் தளங்​களில் உள்ள வீடு​களில் வசித்​தனர். தீ விபத்து ஏற்​பட்​டதும் போலீ​ஸாரும், தீயணைப்பு படை வீரர்​களும் விரைந்து சென்று மீட்​பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 30 பேரை பத்​திர​மாக மீட்​டோம். கரும்​பு​கை​யால் மூச்சு திணறி வீடு​களுக்குள் மயங்கி விழுந்​தவர்​கள் தீயில் சிக்கி உயி​ரிழந்​துள்​ளனர். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

மாநில அமைச்​சர் பொன்​னம் பிர​பாகர் கூறும்​போது, “மின் கசி​வால் தீ விபத்துஏற்​பட்டுள்ளது. போலீ​ஸாரும், தீயணைப்பு படை வீரர்​களும் விரைந்து செயல்​பட்டனர். தீ விபத்து குறித்து உயர்​நிலை விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்டுள்ளது’’ என்று தெரி​வித்​தார்.

மத்திய, மாநில அரசுகள் நிவாரணம்: பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘ஹைத​ரா​பாத் தீ விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்​தேன். உயி​ரிழந்​தவர்​களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்​திக்​கிறேன். அவர்​களது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்து கொள்​கிறேன். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்​சம், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000 இழப்​பீடு வழங்​கப்​படும்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்துள்​ளார். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வருத்தத்தை தெரி​வித்​தார். காயமடைந்​தவர்​களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்​பாடு செய்​யு​மாறு அமைச்​சர்​களுக்கு அவர் உத்​தர​விட்டுள்ளார்.

தீ விபத்து நடந்த இடத்தில் மத்​திய அமைச்​சர் கிஷன் ரெட்டி ஆய்வு செய்​தார்.பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ‘‘சிறிய அளவிலான விபத்​து என்​றாலும்​, உயிர்​ச்​ சேதம்​ அதி​க​மாக உள்​ளது. தீயணைப்​பு​ துறை நவீனமய​மாக்​கப்​பட்​டு இருந்​​தால்​ பல உயிர்​களை காப்​​பாற்​றி இருக்​க முடி​யும்​. இதுகுறித்​து பிரதமரிடம்​ எடுத்​துரைப்​பேன்’’ என்றார்​. முன்​னாள் முதல்​வர் சந்​திரசேகர ராவ் உட்பட பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.



Read More

Previous Post

இனப்படுகொலை தொடர்பில் ஐரோப்பாவில் புதிய நகர்வு : சிக்கலில் இலங்கை

Next Post

Page not found | Makkal Osai

Next Post

Page not found | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin