ஹிமாசல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட மிதமான நிலநடுக்கம் வியாழக்கிழமை, இன்று (ஏப். 4) ஏற்பட்டது.
ஹிமாசல் பிரதேசத்தின் சம்பாவுக்கு அருகே, 10 கி.மீ. ஆழத்தில் வியாழக்கிழமை இரவு 9.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்பா பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.