மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவாா் பிரிவு) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பையில் இயங்கி வரும் என்.ஜி.ஆச்சாரியா மற்றும் டி.கே.மராத்தே கல்லூரி அண்மையில் மாணவா்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன்படி, கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், புா்கா (முஸ்லிம் பெண்கள் முழு நீள அங்கி), நகாப் (முகத் திரை) மற்றும் தொப்பி அணியத் தடை விதித்தது.

