Last Updated:
ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்ததால், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு திரவநிலை எரிவாயு இறக்குமதி தொடங்கும். இதனால் எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்ததும் கத்தாரிடம் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரை தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய வர்த்தக முனையமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. உலகின் 25 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவுக்கான எரிவாயு சப்ளை தடைபட்டது.
இதன் காரணமாக இந்தியாவில் எரிவாயு சப்ளை தடைபட்டு எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையை உயர்த்தின. அதேநேரம், ஈரான் நடத்திய தாக்குதலில் கத்தாரின் எரிவாயு நிறுவனங்கள் தங்களது இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தின.
இந்நிலையில், வளைகுடா நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்தப்போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் ஹார்முஸ் நீரிணையில் வர்த்தக போக்குவரத்திற்கு ஈரான் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கத்தாரில் இருந்து விரைவில் இந்தியாவுக்கான திரவநிலை எரிவாயு இறக்குமதி தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து கத்தாரில் இருந்து ஆண்டுதோறும் 27 மில்லியன் டன் திரவநிலை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இது இந்தியாவின் மொத்த எரிவாயு இறக்குமதியில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்ததும்.. இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி.. வெளியான ஹேப்பி நியூஸ்!


