International
oi-Halley Karthik
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்கா ரொம்ப காலமாகவே முயற்சித்து வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது ஜலசந்தி அமெரிக்காவின் ஒரு பகுதி என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேப் வெளியிட்டிருக்கிறார். இது ஈரானை கோபப்படுத்தியிருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில், இனி இது அமெரிக்காவுக்கு சொந்தம் என்று டிரம்ப் பேசியிருப்பது.. மத்திய கிழக்கு பகுதியில் 3ம் உலகப்போர் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

என்ன நடந்தது?
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் ஹார்முஸ் பகுதியை வட்டமிட்டு காட்டும் புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார். முன்னதாக கடந்த ஆக.14ம் தேதி அவர் பேசும்போது நான், ஹார்முஸை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது மேப்பை வெளியிட்டிருக்கிறார். டிரம்ப்பின் இந்த செயலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் கூறுகையில், “ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. அது மீண்டும் திறக்கப்பட்டாது. வாஷிங்டன் தனது போக்கை மாற்றிக்கொண்டு தனது கடமைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலைமை மாறும்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசிம் கரிபாபாடி கூறுகையில், “ஹார்முஸ் நீரிணையை ட்வீட் மூலமாகவோ, அல்லது அறிவிப்பு மூலமாகவோ யாரும் கைப்பற்றிவிட் முடியாது” என கூறியுள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹைதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வரைபடத்தை ஷேர் செய்து.. இனி கலிபோர்னியா ஈரானின் ஒரு பகுதி என்று கிண்டலாக பதிவிட்டிருக்கிறது.
ஹார்முஸ் மூடப்பட்டிருக்கிறது என்று ஈரான் சொன்னாலும், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றும்.. அமெரிக்காவின் கடற்படை முற்று மூலம் ஹார்முஸ் மீது எங்களுக்கு முழு கட்டுப்பாடு இருக்கிறது என்றும் டிரம்ப் உரிமை கொண்டாடுகிறார்.

