டெல்லியிலிருந்து பிகார் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசியை ஆன் செய்ய தாமதப்படுத்தியதால் பயணிகள் வெப்ப அலைக்கு மத்தியில் விமானத்திற்குள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அவதியடைந்தனர்.
டெல்லியில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 476 இல் இந்த சம்பவம் நடந்துள்ளது. டெல்லி விமான நிலையத்தில் செக்-இன் முடிந்து ஒரு மணி நேரமாக விமானம் புறப்படாமல் இருந்த வேளையில் ஏசியையும் ஆன் செய்யவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
#WATCH | SpiceJet passengers travelling from Delhi to Darbhanga (SG 476) had to wait inside an aircraft without air conditioning (AC) for over an hour amid the ongoing heatwave, with several feeling unwell. pic.twitter.com/cIj2Uu1SQT
— ANI (@ANI) June 19, 2024
விமானத்தின் உள்ளே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில், ஒரு மணி நேரமாக சீரான காற்றோட்டம் இல்லாததால் பயணிகள் அசௌகரியத்தால் அவதியடைந்தனர். விமானம் புறப்பட்ட போது தான் ஏசி இயக்கப்பட்டதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
