ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை 65,000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பியக் கண்டத்தில் பலத்த காட்டுத்தீ தொடர்ந்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்பெயினின் மாட்ரிட் பிராந்தியத்திற்கான அரசாங்கப் பிரதிநிதி பிரான்சிஸ்கோ மார்ட்டின் (Francisco Martín) ஊடக அறிக்கையொன்றை வௌயிட்டுள்ளார்.
மக்கள் ஊரடங்கு
குறித்த அறிக்கையின்படி, ஸ்பெயினில் சுமார் 25,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் 20,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கு போன்ற வீடுகளுக்குள்ளேயே இருக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் (Lockdown) கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தென்மேற்கு பிரான்ஸின் ஜிரோண்ட் (Gironde) பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகக் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 44,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை 12,500 ஹெக்டேர் காடுகள், 53 வீடுகள் மற்றும் ஒரு சுற்றுலா முகாம் (Campsite) முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரெஸ் (Ares), ஆண்டெர்னோஸ் (Andernos), லே டெம்பிள் (Le Temple) மற்றும் சோமோஸ் (Saumos) ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மக்களை அவசரமாக வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

