பட மூலாதாரம், Reuters
ஸ்காட்லாந்துக்கான உச்சக்கட்ட பிரச்சாரம்
ஸ்காட்லாந்தின் விடுதலை குறித்த மக்கள் கருத்தறியும் வாக்களிப்பு, வியாழக்கிழமை நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான இரு தரப்பும் இறுதியான மற்றும் உச்சக்கட்ட வார இறுதி பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.
ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய பிரச்சார தினத்தை தாம் நடத்துவதாக சுதந்திரத்துக்கு ஆதரவான பிரச்சாரகர்கள் கூறியுள்ளனர்.
சுதந்திரத்துக்கு ”ஆம்” என்று வாக்களிக்கக் கோரும் 25 லட்சத்துக்கும் அதிகமான துண்டுப்பிரசுரங்களை, 35,000க்கும் அதிகமான தொண்டர்கள் விநியோகிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்காட்லாந்துக்கும், ஐக்கிய ராட்சியத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான ஒருமைப்பாட்டை விபரிக்கும் வகையிலான ”எல்லைகளின் ஊடான கரங்கள்” என்ற தமது நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஸ்காட்லாந்து பிரிவதை எதிர்க்கும் தரப்பு பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள்.