ஈரானியக் கப்பலிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 பேர், சிகிச்சை முடிந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தென் கடற்பரப்பில் அமெரிக்கக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிய IRIS Dena என்ற ஈரானியப் போர்க்கப்பலிலிருந்தே இவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.
கடந்த புதன்கிழமை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறித்த போர்க்கப்பல் மூழ்கிய போது காயமடைந்த நிலையில் இவர்கள், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பலத்த பாதுகாப்பு
வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும், தற்போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொக்கலையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொக்கலை விமானப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

