Last Updated:
நிதி கல்வி மற்றும் முதலீட்டு கருவிகள் எளிதாக கிடைப்பதால், இளம் தலைமுறையினர் முன்கூட்டியே ஓய்வு பெறுதல், ஆர்வமுள்ள திட்டங்களை முன்னெடுத்தல் அல்லது புதிய தொழிலை தொடங்குவது அதிகரித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் 60 வயது வரை வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதையும், அதற்கு முன்பே போதுமான நிதி சுதந்திரத்துடன் ஓய்வுபெற முடியும் என்பதையும் தங்களது வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இன்றைய காலத்தில், சரியான நிதி திட்டமிடல் மற்றும் ஒழுங்கான முதலீடுகள் மூலம், பலர் 9 முதல் 5 வேலை நேரத்திலிருந்து தப்பி, தங்கள் ஆர்வங்களைப் பின்தொடர்ந்து லாபகரமான முயற்சிகளாக மாற்றி வருகின்றனர்.
நிதி கல்வி மற்றும் முதலீட்டு கருவிகள் எளிதாக கிடைப்பதால், இளம் தலைமுறையினர் முன்கூட்டியே ஓய்வு பெறுதல், ஆர்வமுள்ள திட்டங்களை முன்னெடுத்தல் அல்லது புதிய தொழிலை தொடங்குவது அதிகரித்துள்ளது. இதற்கு உதாரணமாக, முன்னணி நிறுவனங்களில் தங்களது வேலைகளை விட்டுவிட்டு ‘நிதி சுதந்திரம்’ அடைந்த மூன்று இந்தியர்களின் கதையை இனி பார்ப்போம்.
33 வயதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் இருந்த தனது ஆலோசனைப் பணியை விட்டு விட்டு, புகைப்படக் கலை மீது உள்ள ஆர்வத்தைத் தொடர்ந்து அக்னா புரொடக்ஷன்ஸை நிறுவினார். ரூ.50,000 ஆரம்ப முதலீடு, மனைவியின் ஆதரவு மற்றும் ரூ.30 லட்சம் அவசர நிதி அவருக்கு பாதுகாப்பளித்தன. சில ஆண்டுகளில், தனது புகைப்படத் தொழிலை ஆண்டுக்கு ரூ.12 முதல் 15 லட்சம் வருமானம் ஈட்டும் நிலைக்கு கொண்டுவந்தார்.
நிஃப்ட் (NIFT) பட்டதாரிகளான இவர்கள், FIRE (Financial Independence, Retire Early) கொள்கையைப் பின்பற்றி, தங்கள் வருமானத்தின் 50%க்கும் மேலானதை எஸ்ஐபி-கள், பிஎம்எஸ், தங்கத்தில் முதலீடு செய்தனர். வாழ்க்கை முறை செலவுகளை கட்டுப்படுத்தி, 18% XIRR வருமானத்துடன், இன்று ரூ.13 கோடி நிதியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். சுஜோய் விரைவில் வேலைவிடவும் திட்டமிட்டுள்ளார்.
தனது 52 வயதில் உதய குமார், ஷ்னீடர் எலக்ட்ரிக் மென்பொருள் இந்தியாவின் உயர் பதவியை உதறித் தள்ளிவிட்டு, பண்டைய கல்வெட்டுகளை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டின் மீதிருந்த ஊக்கத்தால், தனது சேமிப்புகளையும், பங்கு முதலீடுகளையும் நம்பி, முழுநேரமாக தனது நகரின் வரலாற்றை பாதுகாக்கும் குழுவை தற்போது வழிநடத்தி வருகிறார்.
இந்தக் கதைகள், நிதி ஒழுக்கம், நீண்டகால திட்டமிடல் மற்றும் வாழ்க்கை மதிப்புகளை முன்னிலைப்படுத்துதல் மூலம், எவரும் 60 வயதிற்கு முன்பே வேலையில் இருந்து விடுபட்டு, தங்களது கனவுகளை நனவாக்க பயணிக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.
August 13, 2025 3:01 PM IST
வேலையிலிருந்து விடுபட 60 வயது வரை காத்திருக்க வேண்டாம்…! நிரூபித்துக் காட்டிய 3 இந்தியர்கள்…


