சரியாக ஒரு மாத இடைவெளிக்குள், அமெரிக்காவில் கவனிக்கத்தக்க இன்னொரு துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கே திடீரென ஆலன் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்த ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி மட்டும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார். ஆனால், அவரும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், அவருடைய உயிருக்கு ஆபத்தில்லாமல் இருந்தது.

இந்தச் சம்பவத்தின் சுவடுகள் அடங்குவதற்குள்ளே, அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதுவும் வெள்ளை மாளிகையில்.
நேற்று மாலை (அமெரிக்க நேரப்படி), ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டிற்கு வந்துள்ளார்.
அவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

