சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் சம்பளம் போன்ற சில வேலையிட பிரச்சனைகளை எதிர்கொள்வதை நாம் அறிந்திருப்போம்.
அவ்வாறான சட்ட ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது, என்ன செய்வது என்பதை கூட சில வெளிநாட்டு ஊழியர்கள் அறிந்து இருக்க மாட்டார்கள்.
சம்பளம், காயம் போன்ற பிரச்சனைகளை இனி இலகுவாக கையாள ஒரு புதிய உதவி நிலையம் வெளிநாட்டு ஊழியர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
சிராங்கூன் சாலையில் திறக்கப்பட்டுள்ள அந்த உதவி நிலையத்தின் மூலம் ஊழியர்கள் முழுநேர உதவியை பெறலாம். அங்கு தொண்டூழியர்கள் மற்றும் வழக்கறிஞர் உங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவர் என சொல்லப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு கொடுப்படவேண்டிய சம்பளம் அல்லது சொன்னது ஒன்று கொடுப்பது ஒன்று, முதலாளிகள் தொடர்பான பிரச்சனைகள், கடன், தொல்லை, போலீஸ் தொடர்பானவை போன்று ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அங்கு சென்று ஆலோசனை மற்றும் உதவிகளை பெறலாம்.
Pro Bono SG என்ற இலவச சட்ட ஆலோசனை வழங்கும் அமைப்பும், தொழிற்சங்க காங்கிரஸும் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட ரீதியான உதவிகளை பெறுவது என்பது இனி சிங்கப்பூரில் இலகுவாக இருக்கும். வேலையிடங்களில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பட்சத்தில் அங்கு சென்று உதவிகளை பெறலாம்.
Work pass வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த நாட்டினராக இருந்தாலும் உதவியை நாடலாம் என கூறப்பட்டுள்ளது.
https://bit.ly/RegisterMWLC என்ற இந்த இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம் அல்லது நேரில் வந்தும் நீங்கள் பதிவு செய்யலாம் என இணையப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

The post வெளிநாட்டு ஊழியர்களே சம்பளம் சரியாக வரவில்லையா? – உங்களுக்கான ஒரே தீர்வு appeared first on Tamil Daily Singapore.

