சிங்கப்பூரில் புதிய எஸ் பாஸ் (S Pass) அனுமதிகளை நிறுத்த வேண்டும் என்று சீர்திருத்த மக்கள் கூட்டணி (PAR) தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதோடு சேர்த்து, நிரந்தர வாசிகள் HDB மறுவிற்பனை அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதையும் தடை விதிக்க வேண்டும் என்றும் அது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு
வெளிநாட்டினர் சிங்கப்பூர் வருவதை கணிசமாக குறைப்பதாகவும், “வேலைவாய்ப்புகளில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும்” அந்த கூட்டணி அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
இதனை அக்கூட்டணியின் வேட்பாளர் பிரபு ராமச்சந்திரன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (மே 1) தனது பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது.
மக்கள் செயல் கட்சியின் (PAP) கொள்கைகள் வெளிநாட்டவர்கள் வருகையை பெரிதும் ஆதரிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக PAR பொதுச் செயலாளர் லிம் டீன் தேர்தல் அறிக்கையின் முன்னுரையில் கூறினார்.
“இது சிங்கப்பூரர்களுக்கு உதவியில்லா உணர்வை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர மக்களாக உணர்கிறார்கள், ஏனெனில் அவர்களின் வேலைகளின் வெளிநாட்டினர் அமர்ந்து விடுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளை; இரு இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூரர்களுக்கு வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே PAR அறிக்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.
குறிப்பிட்ட வேலைவாய்ப்புகளை சிங்கப்பூர் ஊழியர்களால் செய்ய முடியாது என நிரூபணம் ஆன பின்னரே வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் அது சுட்டிக்காட்டியது.
இந்தியாவுடனான சிங்கப்பூரின் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA) போன்றவை பல சிங்கப்பூர் ஊழியர்களை முடக்கிவிட்டதாக PAR கூறியது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய S Pass விண்ணப்பங்களுக்கான தகுதிச் சம்பளம் தற்போது S$3,150 ஆக உள்ளது, இது வரும் செப்டம்பர் 1 முதல் S$3,300 ஆக உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “புதிய S Pass ஊழியர்களுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்தி வைக்க கோரிக்கை வைப்போம்,” என்று PAR கூறியது, இதனால் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும்” என்றும் அவர் கூறினார்.
Top Image: TODAY
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்

