Last Updated:
14 வயது வைபவ் சூர்யவன்ஷி IPL போட்டியில் 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
T20 கிரிக்கெட்டின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் தனது பெற்றோர்கள் என்று பெருமையாக கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று 18 வது இந்தியன் பிரீமியர் லீக் எடிஷனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பலத்த போட்டி நடைபெற்றது.
இதில் வெறும் 14 வயதான சூரியவன்ஷி சிக்ஸர் மழையைப் பொழிந்து பார்வையாளர்களுக்கு வான வேடிக்கை காட்டி பிங்க் நகரத்தையே அதிர வைத்து விட்டார். சூர்யவன்ஷி தொடர்ந்து பௌண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அனைவருக்கும் செம ட்ரீட் கொடுத்து விட்டார். 35 பந்துகளில் 100 அடித்ததன் மூலமாக அதிக அளவு பணம் புழங்கக்கூடிய இந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் குறைந்தபட்ச பந்துகளைக் கொண்டு விரைவாக சதம் அடித்து ரெக்கார்டை உடைத்துள்ளார் சூர்யவன்ஷி.
எனினும் சூரியவன்ஷிக்கு கிடைத்த இந்த வெற்றி அவ்வளவு எளிதாக அவருக்கு அமைந்தது கிடையாது. அவர் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதற்கு பின்னணியில் அவருடைய பெற்றோர்களின் எக்கச்சக்கமான முயற்சிகள் உள்ளதாக சூரியவன்ஷி கூறுகிறார். தான் ப்ராக்டிஸ் செஷனுக்கு செல்லும்போது தன்னுடைய அம்மா அதிகாலையிலேயே எழுந்து தனக்காக உணவு தயாரித்து கொடுப்பார் எனவும், தன்னுடைய அப்பா தனது வேலையை விட்டுவிட்டு மகனின் விளையாட்டில் கவனம் செலுத்தியதாகவும், தன்னை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு அவர்கள் இன்னும் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் இந்த 14 வயது சிறுவன் கூறுகிறார்.
“இன்று நான் இந்த நிலைமையில் இருக்க முழு காரணம் என்னுடைய பெற்றோர்கள். நான் பயிற்சிக்கு செல்லும் பொழுது என்னுடைய அம்மா அதிகாலையில் எழுந்து எனக்காக உணவு தயாரித்துக் கொடுப்பார். அவர் வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவார். என் அப்பா எனக்காக தன்னுடைய வேலையை விட்டார் மற்றும் என்னுடைய அண்ணா குடும்ப பாரத்தை இப்போது சுமக்கிறார். நாங்கள் அனைவரும் அதிக அளவு சிரமப்பட்டு இருக்கிறோம். என்னுடைய அப்பா எப்பொழுதுமே எனக்கு துணையாக இருந்துள்ளார். நான் சாதிப்பேன் என்று அடிக்கடி என்னிடம் சொல்வார். இன்று நீங்கள் பார்க்கக்கூடிய என்னுடைய வெற்றி எனது பெற்றோர்களால் எனக்கு கிடைத்தது”, என்று வைபவ் ஒரு வீடியோவில் பேசியுள்ளார். இதனை IPL X தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஓப்பனிங் ஓவரில் முஹம்மத் சிராஜ் பந்து வீச, சூர்யவன்ஷி பந்தை 90 மீட்டர் உயரத்திற்கு அடித்து, பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்து விட்டார். அதன் பிறகு வந்த ரஷீத் கானின் ஸ்பின் பந்துகளை துளியும் யோசிக்காமல் அங்கும் இங்கும் ஆக சிக்ஸர்களாக விலாசினார். சூரியவன்ஷியை அடக்க முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் திணறி போனது. இறுதியில் பிரசித் கிருஷ்ணா சூரியவன்ஷியின் ஆட்டத்தை முடித்து வைத்தார். அப்போது சூரியவன்ஷி 38 பந்துகளுக்கு 101 ரன்கள் அடித்திருந்தார். விக்கெட்டை தாமதமாக எடுத்தாலும், சேதம் சேதம் தான் என்பது போல, குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
April 29, 2025 9:21 PM IST


