Last Updated:
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வெனிசுலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கத்தின் கோர பிடியில் சிக்கி சிதிலமடைந்த கட்டடங்களில் ஒரு மாதத்தை கடந்தும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெனிசுலாவில் கடந்த 24ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. வெறும் 39 விநாடி இடைவெளியில் ஏற்பட்ட பயங்கர அதிர்வுகள், ஒட்டுமொத்த நகரங்களையும் சீர்குலைய வைத்தன. குறிப்பாக, நாட்டின் முக்கிய விமான நிலையம் மற்றும் துறைமுகம் அமைந்துள்ள லா குவைரா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்று புவியியல் ஆய்வு மைய நிபுணர்கள் கணித்துள்ளனர்.


