Last Updated:
Donald Trump ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை, USS Abraham Lincoln போர்க் கப்பல் அனுப்பப்படுவதாக அறிவிப்பு.
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டி வரும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், ஈரானில் நிலவும் பொருளாதார சுணக்கத்தைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அந்நாட்டு அரசு தண்டித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டிர்மப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு, தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இதுவரை நடந்திராத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எதிர்வினையாற்றியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், ஈரான் உடனடியாக அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் எனவும், இல்லாவிட்டால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார். வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட சக்தி வாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் ஈரான் நோக்கி வருவதாகவும், நிலைமை மோசமாவதை ஈரான் தவிர்க்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறிவிட்டு பின்னர் அதை தவிர்த்த ஈரான் மீது ஆபரேஷன் மிட்நைட் ஹேம்மர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் அது போன்று ஈரான் செய்தால் கடும் விளைவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.


